குர்ஆன் என்னும் பெயர் : வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபியவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும் குறிப்பிடப்படும் “குர்ஆன்” என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது “குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது. திருக் குர்ஆனிலே திருக் குர்ஆனைக் குறிக்கும் பெயர்கள் பலவற்றைத் தனியே ஒரு பக்கத்தில் தந்துள்ளோம். அருளப்பெற்ற நாள் : நபிகள் பெருமானார் அவர்களுடைய நாற்பதாவது வயதிலே, ரமளான் மாதத்தின் பிந்திய இரவுகளில் ஓர் இரவன்று, மக்கமா நகருக்கு அருகிலுள்ள ஹிராக் குகையிலே தனித்திருந்து, இறைவனைச் சிந்தித்திருந்த நேரத்தில் தான் திருக் குர்ஆன் முதன் முதலாக அருளப் பெற்றது. அந்த இரவு தான் “லைலத்துல் கத்ர்” (கண்ணியமிக்க இரவு) என்று அறியப்படுகிறது. மாண்புமிக்க அந்த இரவிலே முதன் முதலாக அருளப் பெறத்துவங்கிய இந்த வான்மறை, அந்தந்தக் காலத்தின் நிலைமைக்கும் அவசியத்திற்கும் தக்கவாறு, - பெருமானார் வாழ்ந்த பிந்திய 23-வருடங்களில்- கொஞ்சங் கொஞ்சமாக அருளப்பெற்று பூர்த்தி பெற்றது. இவ்வாறு அந்த 23-ஆண்டுகளில் இறைவனால் அறிவிக்கப்பட்டதே திருக் குர்ஆன். குர்ஆனின் அமைப்பு : திருக்குர்ஆன் 3 வசனங்கள் முதல் 286 வசனங்கள் வரையிலுமுள்ள, சிறிய, பெரிய 114 அத்தியாயங்களாக அமைக்கப்பட்டுள்ளது. திருக் குர்ஆனில் உள்ள வசனங்களும், அத்தியாயங்களும் இப்பொழுதுள்ள வரிசைக்கிரமப்படி அருளப் பெறவில்லை. கால நிலைமைக்கும், மக்களின் தேவைக்கும் அவசியமான அளவு சிறிது, சிறிதாக அத்தியாயங்களாகவும், வசனங்களாகவும், அருளப் பெற்று வந்தன. இவ்வாறு அருளப் பெற்று வரும் காலத்தில், நபி பெருமானார்களுக்கு, இறைவன் கற்பித்ததற்கிணங்க, இன்னின்ன வசனங்கள், இன்னின்ன அத்தியாயங்களை சேர்ந்தவையெனவும், அதிலும் குறிப்பிட்ட வசனம், குறிப்பிட்ட அத்தியாயத்தில் எத்தனையாவது வசனம் எனவும் அறிவித்து வந்தார்கள். அந்த ஒழுங்கு முறைப்படி அமைக்கப் பெற்றது தான், இக்காலத்தில் நம்மிடத்தில் இருக்கும் திருக் குர்ஆன். இந்த அமைப்பு முறைக்கு, “தௌகீஃபீ” (அறிவிப்புப்படி அமைக்கப் பெற்றது) என்றும், “தர்தீபே திலாவதி” (ஓதக்கூடிய வரிசை) என்றும், “தர்தீபே ரஸுலி” (ரஸுலுடைய வரிசை) என்றும் கூறப்பெறுகின்றது. தவிர, திருக் குர்ஆனின் வசனங்களும், அத்தியாங்களும் அருளப் பெற்ற முறைக்குத் “தர்தீபே நுஜுலி” (அருளப் பெற்ற வரிசை) என்று கூறப்பெறுகின்றது.
Latest episodes of the podcast Tamil Quran
- ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)
- ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை)
- ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்)
- ஸூரத்துல் லஹப் (ஜுவாலை)
- ஸூரத்துந் நஸ்ர் (உதவி)
- ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்)
- ஸூரத்துல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்)
- ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்)
- ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்)
- ஸூரத்துல் ஃபீல் (யானை)
- ஸூரத்துல் ஹுமஜா (புறங்கூறல்)
- ஸூரத்துல் அஸ்ரி (காலம்)
- ஸூரத்துத் தகாஸுர் (பேராசை)
- ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)
- ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை)
- ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி)
- ஸூரத்துல் பய்யினா (தெளிவான ஆதாரம்)
- ஸூரத்துல் கத்ரி (கண்ணியமிக்க இரவு)
- ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி)
- ஸூரத்துத் தீன் (அத்தி)
- ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்)
- ஸூரத்துள் ளுஹா (முற்பகல்)
- ஸூரத்துல் லைல்(இரவு)
- ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்)
- ஸூரத்துல் பலத்(நகரம்)
- ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை)
- ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்)
- ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்)
- ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி)
- ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்)
- ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்)
- ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்)
- ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்)
- ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்)
- ஸூரத்து அபஸ (கடு கடுத்தார்)
- ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்)
- ஸூரத்துந் நபா (பெரும் செய்தி)
- ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை)
- ஸூரத்துத் தஹ்ர் (காலம்)
- ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)
- ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்)
- ஸூரத்துல் முஸ்ஸம்மில் (போர்வை போர்த்தியவர்)
- ஸூரத்துல் ஜின்னு (ஜின்கள்)
- ஸூரத்து நூஹ்
- ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்)
- ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது)
- ஸூரத்துல் கலம்; (எழுதுகோல்)
- ஸூரத்துல் முல்க் (ஆட்சி)
- ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்)
- ஸூரத்துத் தலாஃக் (விவாகரத்து)
- ஸூரத்துத் தஃகாபுன் (நஷ்டம்)
- ஸூரத்துல் ஜுமுஆ (வெள்ளிக் கிழமை)
- ஸூரத்துல் முனாஃபிஃகூன் (நயவஞ்சகர்கள்)
- ஸூரத்துஸ் ஸஃப்ஃபு (அணிவகுப்பு)
- ஸூரத்துல் ஹஷ்ர் (ஒன்று கூட்டுதல்)
- ஸூரத்துல் மும்தஹினா (பரிசோதித்தல்)
- ஸூரத்துல் ஹதீத்(இரும்பு)
- ஸூரத்துல் முஜாதலா (தர்க்கித்தல்)
- ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)
- ஸூரத்துல் கமர் (சந்திரன்)
- ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)
- ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்)
- ஸூரத்துத் தூர் (மலை)
- ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)
- ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்)
- ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்)
- ஸூரத்துல் அஹ்காஃப் (மணல் திட்டுகள்)
- ஸூரத்து ஃகாஃப்
- ஸூரத்துத் துகான் (புகை)
- ஸூரத்துஜ் ஜுக்ருஃப் (பொன் அலங்காரம்)
- ஸூரத்துல் ஃபத்ஹ் (வெற்றி)
- ஸூரத்து முஹம்மது(ஸல்)
- ஸூரத்துஷ் ஷூறா (கலந்தாலோசித்தல்)
- ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா
- ஸூரத்துல் முஃமின் (ஈமான் கொண்டவர்)
- ஸூரத்து ஸாத்
- ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)
- ஸூரத்து யாஸீன்
- ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்)
- ஸூரத்துஸ் ஸபா
- ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்)
- ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்)
- ஸூரத்துஸ் ஸஜ்தா (சிரம் பணிதல்)
- ஸூரத்து லுக்மான்
- ஸூரத்துர் ரூம் (ரோமானியப் பேரரசு)
- ஸூரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி)
- ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்)
- ஸூரத்துந் நம்லி(எறும்புகள்)
- ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)
- ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்)
- ஸூரத்துந் நூர் (பேரொளி)
- ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)
- ஸூரத்துல் ஹஜ்
- ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்)
- ஸூரத்து தாஹா
- ஸூரத்து மர்யம்
- ஸூரத்துல் கஹ்ஃபு (குகை)
- பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)
- ஸூரத்துந் நஹ்ல் (தேனி)
- ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை)
- ஸூரத்து இப்ராஹீம்
- ஸூரத்துர் ரஃது (இடி)
- ஸூரத்து யூஸுஃப்
- ஸூரத்து ஹூது
- ஸூரத்து யூனுஸ் (நபி)
- ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்)
- ஸூரத்துல் அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்)
- ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)
- ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்)
- ஸூரத்துல் மாயிதா (ஆகாரம்) (உணவு மரவை)
- ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்)
- ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)
- ஸூரத்துல் பகரா (பசு மாடு)
- அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்)