கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில் Part 4: Andal priyadharshini

07/06/2008 12 min

Listen "கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில் Part 4: Andal priyadharshini"

Episode Synopsis

exclusively covered by http://www.adhikaalai.com

அரங்கில் அதிகமான கைத் தட்டல்களை அள்ளிச் சென்ற கவிஞர் ஆண்டாள் பிரியத்ர்ஷினி மேடையேறினார். தந்தைக்கு மகள் எழுதும் கடிதமாக அவர் கவிதை ஆரமபமானது.

"நேரில் சந்திக்கத்தான்
நினைத்திருந்தேன் தந்தையே..
ஆனால் ஐயா சண்முகநாதனிடம்
சதிராட்டம் ஆட முடியாது ..
அதனால்... என் கவிதைத் தூது.
தமிழகத்தின் நெற்களஞ்சியம்
உன்னைப் பெற்றால்தான்
சொற்கள்ஞ்சியமாகியது.
உனக்கு
கடவுள் நம்பிக்கை இல்லை.
ஆனால் நீதான் அப்பா
எங்கள் தமிழ்க் கடவுள்.
எப்போதும்
உன் அருகிருக்கும்
வள்ளிக்கு ஒரு வணக்கம்.
தெய்வானைக்கும் ஒரு வணக்கம்..."என்றபோது ஆரவாரத்தின் உச்சம் அதிகமானது.

எம்பி.சீட், எம் எல் ஏ.சீட்,
வாரியத் தலைவர் பதவி என்று
எதுவும் வேண்டாம் அப்பா..
உங்கள் தமிழ் உள்ளத்தில்
ஓரமாய் சிறு இடம்
அது போதும் எனக்கு ....” என்ற போது இலக்கியத் தோழிகள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர்.சல்மா ஆகியோர் ஒருவரை ஒருவர் பார்த்து மர்மப் புன்னகை செய்து கொண்டனர்.

வெள்ளுடையில் உடை உடுத்தி, அழைத்து வந்த உதவியாளரிடம் கவிதைக் காகிதம் வாங்கி,குரல் செருமி ஆரம்பித்தார் வைரமுத்து.சித்த வைத்தியத்தை பக்குவமாய்ச் சொன்னார்.அதைஎல்லாம் விட கலைஞரின் இளமைக்கு காரணம் திராவிட லேகியம் என்றார்.வைரமுத்துவின் கவிதைகளில் அவரின் ஒலியின் ஆதிக்கமே அதிகம் இருந்தது.ரசிகர்களின் கை தட்டலகளை அவ்வளவாகப் பெறவில்லை.

ஒகனேக்கல் திட்டம், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சேது சமுத்திர திட்டம் என நடப்பு விவாகரங்கள் கவிதையாக்கப்பட்டிருந்தது.

மருத்துவமனை ராஜவைத்தியங்களின் 3 நாள் சிகிச்சையைவிட கவியரங்கத்தின் 2 மணி நேர ரசனை கலைஞரை நிறையவே உற்சாகப்படுத்தியது. அரங்கத்துக்குள் நுழைந்ததைவிட அவர் புறப்படும்போது அவரின் முகத்தில் அவ்வளவு அதிகமான பூரிப்பு.

More episodes of the podcast editor2's podcast